04/01/2024

பொதுமக்கள் வடிகான்களை தடை செய்வதை தவிர்த்தல்

news images

அக்கரைப்பற்று மாநகரப் பிரதேசத்தின் வடிகான்கள் மாநகர சபையினால் கிரமமாக சுத்திகரிக்கப்பட்டதன் பயனாக ஒவ்வொரு வருடமும் எதிர்பார்க்கப்படுகின்ற அக்கரைப்பற்று நகர் பகுதிக்கான வெள்ள அனர்த்தம் இம்முறை குறைக்கப்பட்டுள்ளது தாங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும்.
எனவே பொதுமக்கள் வடிகான்களை தடை செய்கின்ற நடவடிக்கைகளை தவிர்த்து இந்நிலைமையினை தொடர்ச்சியாக பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மேலும் புதிய கட்டடங்களை அமைக்கும் போது முறையான அனுமதிகளை பெற்றுக் கொள்வதானது இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் எமது நகரினையும் பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாநகர சபை
அக்கரைப்பற்று

Loading

Top